26.2 C
Jaffna
February 17, 2025
Pagetamil
பிரதான செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரையும் தண்டிப்போம்: கோட்டாபய!

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரையும் தண்டிக்க முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று குருநாகல், கிரிபவவில் நடந்த ஒரு நிகழ்வின் போது பேசிய ஜனாதிபதி ராஜபக்ஷ, முந்தைய நிர்வாகத்தின் பலவீனங்களால் 2019 ஆம் ஆண்டில் மீண்டும் நாட்டில் குண்டுகள் வெடித்தன என்றார்.

செப்டம்பர் 2019 இல் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு குண்டுவெடிப்பிற்கு யார் காரணம் என்பதை தெளிவாக சுட்டிக்காட்டியதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தான் அறிக்கையைப் பெற்றதாகக் குறிப்பிட்டார்.

தேசிய பாதுகாப்பு விஷயங்களில் முந்தைய அரசாங்கத்தின் தளர்வான அணுகுமுறை மற்றும் திறமையின்மை ஆகியவை ஏப்ரல் 2019 தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள முக்கிய காரணிகள் என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது என்றார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அப்போதைய அரசாங்கம் தாக்குதல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளதாக ஜனாதிபதி கூறினார்.

முந்தைய நிர்வாகத்தின் ஒரு பகுதியாக இருந்தவர்கள் இப்போது நல்லாட்சி அரசாங்கத்தில் கட்சி இல்லை என்பது போல் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துகிறார்கள் என்று ஜனாதிபதி கூறினார்.

2015 க்கு முன்னர் நடைமுறையில் இருந்த பாதுகாப்புத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முந்தைய அரசாங்கமும் தவறிவிட்டது என்று ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்ற கூற்றுகளையும் ஜனாதிபதி நிராகரித்தார்.

தாக்குதல்களில் ஈடுபட்ட அனைவரையும் தண்டிக்கும் பொறுப்பை தற்போதைய நிர்வாகம் ஏற்றுக் கொள்ளும் என்று ஜனாதிபதி ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவும் குற்றவியல் புலனாய்வுத் துறையும் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் காணும் விசாரணையைத் தொடர்கின்றன.  குண்டுவெடிப்பு தொடர்பான அனைத்து விவரங்களையும் வெளிக்கொணர விசாரணைகளை முன்னெடுப்பதாக ஜனாதிபதி கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வரலாற்றில் இன்று – பெப்ரவரி 17

east tamil

வரலாற்றில் இன்று – பெப்ரவரி 16

east tamil

வரலாற்றில் இன்று – பெப்ரவரி 15

east tamil

வரலாற்றில் இன்று – 14.02.2025

east tamil

வரலாற்றில் இன்று (பெப்ரவரி 13)

east tamil

Leave a Comment