27.2 C
Jaffna
February 7, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

வடக்கில் 20 பேருக்கு கொரோனா தொற்று!

வடக்கில் இன்று 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இன்று அடையாளம் காணப்பட்டவர்களில் 8 பேர் யாழ் மாவட்டத்தையும், 12 பேர் மன்னார் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள்.

யாழ் மாவட்டத்தில், ஊர்காவற்றுறை பகுதியில் 6 பேரும், அச்சுவேலியில் ஒருவரும், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வந்த ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

அச்சுவேலியில் அடையாளம் காணப்பட்டவர், விசுவமடு பாடசாலையொன்றில் ஆசிரியையாவார். யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்டவர் நவாலியை சேர்ந்த பெண்ணாவார்.

மன்னார் அடையாளம் காணப்பட்டவர்களில், நகரில் கொமர்ஷல் கிரெடிட் நிறுவனத்தின் ஊழியர்கள் 5 பேர், சலூன் ஊழியர்கள் 2 பேர், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், மாந்தை மேற்கில் 2 பேர், மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சைக்கு சென்ற வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள் இருவர் தொற்றிற்குள்ளாகினர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாவையின் இறுதிக்கிரியையில் சர்ச்சை பதாகை: பொலிசில் முறைப்பாடு!

Pagetamil

‘மாவையை நீதிமன்றத்தில் நிறுத்திய போது…’: பழைய நினைவுகளை மீட்ட விக்னேஸ்வரன்!

Pagetamil

தீயில் சங்கமித்தார் மாவை!

Pagetamil

மாவை காலமானார்!

Pagetamil

அர்ச்சுனா எம்.பி கைது!

Pagetamil

Leave a Comment