தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகளிற்கு பொதுமன்னிப்பு: சம்பிக்க வலியுறுத்தல்!

Date:

இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டள்ள முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளிகளிற்கு பொதுமன்னிப்பளிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க.

விடுதலைப் புலிகளின் தலைவர்களின் கட்டளையின்படியே அவர்கள் செயற்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

நேற்று நடந்த கலந்துரையாடல் ஒன்றில் இதனை தெரிித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் நிலைப்பாடுகளை உறுதிசெய்ய அரசாங்கம் முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும்.

இலங்கை மீது வாக்கெடுப்புடன் புதிய தீர்மானம் எடுக்கப்படும் வாய்ப்புள்ளது. அது விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.

ஐ.நா அறிக்கை   2009 மே 18 ஆம் திகதி முடிவடைந்த மோதலில் கவனம் செலுத்தும். பெரும்பாலும் ஆயுதப்படைகளின் மனித உரிமை மீறல்கள் குறித்து கவனம் செலுத்தியது.

புலிகள் தலைவரான குமரன் பத்மநாதன் உட்பட 12,600 கைதிகள் விடுவிக்கப்பட்டதைப் போலவே,  கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். இதனை வெளிப்படையாக மேற்கொள்வதுடன், அவர்கள் சமூகத்தில் இணைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விஜய்யை வாழ்த்தியதால் அநுரவுக்கு வந்த சிக்கல்!

சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அனுர...

கோட்டாவின் கொடூர பழிவாங்கலுக்கு பரிகாரம்: ஷானி அபேசேகரவிற்கு பதவி உயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இயக்குநரான ஷானி அபேசேகரவை, காவல்துறை பிரதிப் பொலிஸ்...

இளம் மனைவியை காணவில்லையென கணவன் முறைப்பாடு!

யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காணவில்லை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்