ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை பயன்படுத்த சுகாதார அமைச்சு அனுமதி: அடுத்த வாரம் வருகிறது!

Date:

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்பூட்னிக்-வி கோவிட் -19 தடுப்பூசியை இலங்கையில் அவசரகால பயன்பாட்டிற்கு தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

மருந்து, உற்பத்தி மற்றும் வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் ​​சன்ன ஜெயசுமன இதனை தெரிவித்தார்.

இலங்கையில் அவசரகால பயன்பாட்டிற்கு இந்தியாவின் சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி முதலாவதாக அங்கீகரிக்கப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக, ஸ்பூட்னிக்-வி தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

ஸ்பூட்னிக்-வி தடுப்பூசியும், ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியும் ஒத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாராக்கப்பட்டுள்ளன. அவை இரண்டும் செலுத்தும் அளவும் ஒத்தவை.

ஸ்பூட்னிக்-வி தடுப்பூசியை தயாரிக்கும் ரஷ்ய நிறுவனத்திற்கு இலங்கையில் அதன் பயன்பாட்டிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  ஸ்பட்னிக்-வி தடுப்பூசியை உடனடியாகக் கொண்டு வந்து அடுத்த சில வாரங்களுக்குள் பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இருப்பினும், நாட்டில் தடுப்பூசிகளின் முதல் தொகுதி வரும் ஒரு திட்டவட்டமான திகதியை தற்போது கூற முடியாது என இராஜாங்க அமைச்சர் ஜெயசுமன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் உலக சுகாதார நிறுவனத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் தடுப்பூசிகளின் முதல் தொகுதி ஞாயிற்றுக்கிழமை நாட்டிற்கு வர உள்ளது என்றும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

முள்ளிவாய்க்கால் அவலம்: 17 வருடங்களின் பின் மே மாதத்தில் மஹிந்த குடும்பம் கண்ணீர் விடுகிறது!

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இன அழிப்பின் போது தமிழ் மக்கள் விட்ட கண்ணீர்...

சீனாவை வந்தடைந்தார் ட்ரம்ப்

போட்டி வல்லரசுகளுக்கு இடையேயான ஆழ்ந்த பதற்றங்களைத் தணிக்கும் நோக்கில், சீனத் தலைவர்...

அடை மழையால் ஒருவர் பலி: 200 பேர் பாதிப்பு!

நாட்டின் பல பகுதிகளைப் பாதிக்கும் மோசமான வானிலை காரணமாக மட்டக்களப்பில் ஒருவர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்