கல்முனையில் இளம் தொழில் முனைவோருக்கு அரச காணி வழங்கல் நேர்முகப்பரீட்சை

Date:

ஜனாதிபதியின் இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதற்காக அரசாங்க காணிகளில் முதலீட்டு வாய்ப்புக்களை வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தொழில் முயற்சி ஆற்றல் தொடர்பாக பரீட்சிக்கும் நேர்முகப்பரீட்சை அம்பாறை மாவட்டத்தில் இடம் பெற்று வருகின்றது.

அந்த வகையில், கல்முனை பிரதேச செயலாளர் பிரிவில் தொழில் முயற்சி ஆற்றல் தொடர்பாக பரீட்சிக்கும் நேர்முகப்பரீட்சை செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

பிரதேச செயலாளர் ஜே.லியக்கத் அலி தலைமையில் நடைபெற்ற நேர்முகப்பரீட்சையில் காணி உத்தியோகத்தர்களான ஏ.ஜெமீல், ஏ.எச்.எம்.ஹிபாயத்துல்லாஹ், காணி பயன்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எம்.ஜஹ்பர், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் யூ.எல்.றமீஸ், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஏ.பி.ஏ.ஜெலீல் மற்றும் பட்டதாரி பயிலுனர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கல்முனை பிரதேச செயலாளர் பிரிவில் 1,431 நபர்களுக்கு தொழில் முயற்சி ஆற்றல் தொடர்பாக பரீட்சிக்கும் நேர்முகப் பரீட்சைக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் ஜே.லியக்கத் அலி தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மின்சாரசபை ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடரும் என அறிவிப்பு!

தமது கோரிக்கைகளுக்குச் சாதகமான பதில் கிடைக்கும் வரை தற்போதைய வேலைநிறுத்தப் போராட்டத்தை...

யுவதியின் தங்கச்சங்கிலி அறுத்தவர் மடக்கிப்பிடிப்பு

வென்னப்புவ, வைக்கல், தம்பரவில தேவாலயத்திற்கு அருகிலுள்ள ஒரு துணை வீதியில் மோட்டார்...

பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு ஏற்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், எந்தவொரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்