27.6 C
Jaffna
February 12, 2025
Pagetamil
கிழக்கு

கல்முனையில் இளம் தொழில் முனைவோருக்கு அரச காணி வழங்கல் நேர்முகப்பரீட்சை

ஜனாதிபதியின் இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதற்காக அரசாங்க காணிகளில் முதலீட்டு வாய்ப்புக்களை வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தொழில் முயற்சி ஆற்றல் தொடர்பாக பரீட்சிக்கும் நேர்முகப்பரீட்சை அம்பாறை மாவட்டத்தில் இடம் பெற்று வருகின்றது.

அந்த வகையில், கல்முனை பிரதேச செயலாளர் பிரிவில் தொழில் முயற்சி ஆற்றல் தொடர்பாக பரீட்சிக்கும் நேர்முகப்பரீட்சை செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

பிரதேச செயலாளர் ஜே.லியக்கத் அலி தலைமையில் நடைபெற்ற நேர்முகப்பரீட்சையில் காணி உத்தியோகத்தர்களான ஏ.ஜெமீல், ஏ.எச்.எம்.ஹிபாயத்துல்லாஹ், காணி பயன்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எம்.ஜஹ்பர், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் யூ.எல்.றமீஸ், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஏ.பி.ஏ.ஜெலீல் மற்றும் பட்டதாரி பயிலுனர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கல்முனை பிரதேச செயலாளர் பிரிவில் 1,431 நபர்களுக்கு தொழில் முயற்சி ஆற்றல் தொடர்பாக பரீட்சிக்கும் நேர்முகப் பரீட்சைக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் ஜே.லியக்கத் அலி தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சட்டவிரோதமாக வலம்புரி சங்குகள் விற்பனைக்கு முயற்சித்த மூவர் கைது

east tamil

குமாரபுரம் படுகொலைக்கு அனுரவிடம் கோரப்படும் நீதி

east tamil

திருகோணமலையில் விபத்து

east tamil

25 வருடங்களாக இலவசமாக கலை வளர்க்கும் முத்துக்குமார சுவாமி ஆலயம்

east tamil

திருக்கோணேஸ்வரர் ஆலய வருடாந்த பொதுக்கூட்டம்

east tamil

Leave a Comment