வவுனியா ஓமந்தை பகுதியில் இராணுவத்தின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி இரண்டுபேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று காலை 4மணிக்கு இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்>
ஓமந்தை காட்டுப்பகுதியில் இருந்து சட்டவிரோத மரங்களை கடத்திசென்ற வாகனத்தை வீதியில் கடமையில் நின்றிருந்த இராணுவத்தினர் மறித்துள்ளனர்
எனினும் வாகனம் நிற்காமல் சென்றமையால் அதன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக இராணுவத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் சேமமடு பகுதியை சேர்ந்த பிரசாத், சயீவன் ஆகியோரே காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட மரம் ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளது. பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1