கண்டியில் உள்ள தொழிலாளர் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் 10 ,000 ரூபா இலஞ்சம் பெற்றக் குற்றச்சாட்டின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
அக்குரணவை சேர்ந்த தொழிலதிபர் மரம் வெட்டுதல் ஆலை நடத்தி வருகிறார். தனது ஊழியர்களுக்கு ஓய்வூதியக் கொடுப்பனவுகளை வழங்காதது தொடர்பான விதிகளை பின்பற்றாததற்காக ரூ .30,000 செலுத்தும்படி, அதிகாரி கேட்டுள்ளார்.
பின்னர் பேரம் பேசி, 15,000 ரூபாயாக குறைக்கப்பட்டது. இன்று, 10,000 ரூபா பணம் வாங்கியபோது சிக்கினார்.



