இரணைதீவில் கொவிட் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்காக தோண்டப்பட்ட சவக்கிடங்குகளை பிரதேச மக்கள் ஒன்றிணைந்து மூடியுள்ளனர்.
தமது பகுதியில் சடலங்களை புதைக்க வேண்டாமென எதிர்ப்பு தெரிவித்து, இரணைதீவு மக்களும், கத்தோலிக்க மதகுருமார்களுடன் இணைந்து இன்று (3) காலை எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இரணைமாதா நகர் இறங்குதுறையில் போராட்டத்தில் ஈடுபட்ட பின்னர் மக்களும், கத்தோலிக்க மதகுருமாரும் இரணைதீவுக்கு சென்றனர்.
அங்கு சடலங்களை அடக்கம் செய்ய தோண்டப்பட்டிருந்த சவக்கிடங்குகளை பொதுமக்கள் மூடினர்.

What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1