27.7 C
Jaffna
September 22, 2023
குற்றம்

மாணவியின் பரீட்சை அனுமதி அட்டையை தீயிட்ட தந்தைக்கு விளக்கமறியல்!

க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றவிருந்த தனது மகளின் தேசிய அடையாள அட்டை, பரீட்சை அனுமதி அட்டை மற்றும் ஆடை உட்பட வீட்டிலுள்ள அனைத்து பொருட்களையும் தீவைத்த தந்தை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஹபராதுவ பிரதேசத்தில்இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மதுபோதையில் வீட்டுக்கு வந்த நபர், மனைவியுடன் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து வீட்டிலுள்ள பொருட்களுக்கு தீவைத்துள்ளார். இதில் மாணவியின் தேசிய அடையாள அட்டை, பரீட்சை அனுமதி அட்டை மற்றும் ஆடை உட்பட வீட்டிலுள்ள அனைத்து பொருட்களும் தீக்கிரையாகின.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஹபராதுவ காவல்துறையினரால் நேற்று(01) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் காலி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 15 ஆம்திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நேற்று க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் ஆரம்பித்த நிலையில், மாணவியினது அடையாள அட்டை மற்றும் அனுமதி அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் தீக்கிரையாக்கப்பட்டதாக காவல்துறையினரால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட கடிதம் பரீட்சை மண்டப பொறுப்பாளரிடம் கையளிக்கப்பட்டது.

இதனையடுத்து, பரீட்சை எழுதுவதற்கு மாணவிக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காமக்கொடூரனை கண்டால் தகவலளியுங்கள்

Pagetamil

சுவிஸிலிருந்து வந்தவர் வவுனியாவில் சடலமாக மீட்பு!

Pagetamil

அன்ரி வயது பெண்ணில் ஆசைப்பட்ட 16 வயது மாணவன்: அந்தரங்க உறுப்பில் மிளக்காய்த்தூள் தூவப்பட்ட சம்பவத்தின் பின்னணி!

Pagetamil

சுற்றுலா விசாவில் இலங்கை பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பெண் கைது!

Pagetamil

அன்ரிகளில் ஆசைப்பட்டால் இதுதான் கதி: 16 வயது மாணவன் கடத்தப்பட்டு அந்தரங்க உறுப்பில் மிளகாய்த்தூள் தூவப்பட்டது!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!