28.2 C
Jaffna
February 12, 2025
Pagetamil
இலங்கை குற்றம்

குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயின் அதிர்ச்சி வீடியோ: கணவனிற்கு அனுப்ப பதிவு செய்தாராம்: யாழில் இளம் தாய் கைது!

தனது பச்சிளங்குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயார் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம், மணியந்தோட்ட பகுதியை சேர்ந்த 23 வயதான தாயொருவரே கைது செய்யப்பட்டார்.

நேற்று (1) இரவு தனது குழந்தையை கொடூரமாக தாக்கிய இளம் தாயொருவரின் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

தடியொன்றினால் 7 மாத குழந்தையை அந்த பெண் கொடூரமாக தாக்கும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியிருந்தது.

இன்று காலையில் இது தொடர்பில் நடவடிக்கையெடுத்த சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள், குழந்தையை தமது பொறுப்பில் எடுத்தனர். அத்துடன் தாயாரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் திருகோணமலையை சேர்ந்தவர் என்றும், தற்போது அரியாலையில் வாடகைக்கு குடியிருக்கிறார் என்பதும் தெரிய வந்தது. அத்துடன், குவைத்தில் குழந்தை பிரசவித்து நாடு திரும்பியதாகவும், கணவர் பணம் அனுப்பாததால், அவருக்கு அனுப்ப குழந்தையை அடிக்கும் வீடியோவை பதிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
5

இதையும் படியுங்கள்

10 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற பதின்ம வயது சிறுவன் கைது

east tamil

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் மோதல் CCTV காட்சிகள்

east tamil

ஓரினச்சேர்க்கையை சமூகமயப்படுத்த பணம் பெற்ற பிரதமர் ஹரிணி பதவி விலக வேண்டும் – அக்மீமன தயாரத்ன தேரர்

east tamil

வெளியாட்களால் பாடசாலை வளாகத்தில் வன்முறை – 11 மாணவர்கள் காயம்

east tamil

வாதுவ பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் எதிர்ப்பு தெரிவித்து திரண்ட மக்கள்

east tamil

Leave a Comment