குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயின் அதிர்ச்சி வீடியோ: கணவனிற்கு அனுப்ப பதிவு செய்தாராம்: யாழில் இளம் தாய் கைது!

Date:

தனது பச்சிளங்குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயார் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம், மணியந்தோட்ட பகுதியை சேர்ந்த 23 வயதான தாயொருவரே கைது செய்யப்பட்டார்.

நேற்று (1) இரவு தனது குழந்தையை கொடூரமாக தாக்கிய இளம் தாயொருவரின் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

தடியொன்றினால் 7 மாத குழந்தையை அந்த பெண் கொடூரமாக தாக்கும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியிருந்தது.

இன்று காலையில் இது தொடர்பில் நடவடிக்கையெடுத்த சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள், குழந்தையை தமது பொறுப்பில் எடுத்தனர். அத்துடன் தாயாரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் திருகோணமலையை சேர்ந்தவர் என்றும், தற்போது அரியாலையில் வாடகைக்கு குடியிருக்கிறார் என்பதும் தெரிய வந்தது. அத்துடன், குவைத்தில் குழந்தை பிரசவித்து நாடு திரும்பியதாகவும், கணவர் பணம் அனுப்பாததால், அவருக்கு அனுப்ப குழந்தையை அடிக்கும் வீடியோவை பதிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஈரான் போராட்டங்களில் 3,117 பேர் பலி

டிசம்பர் மாத இறுதியில் வெடித்த போராட்டங்களின் போது 3,117 பேர் கொல்லப்பட்டதாகவு...

விஜய்யிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை – குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்ப்பா?

டெல்​லி​ சிபிஐ தலைமை அலு​வல​கத்​தில் நேற்று ஆஜரான தவெக தலை​வர் விஜய்​யிடம்...

கற்பை நிரூபிக்க சீதை போல் மனைவியை தீக்குளிக்க வைத்த கணவன்!

குற்றமற்றவள் என நிரூபித்து காட்டு என மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்