27.8 C
Jaffna
September 21, 2023
இலங்கை

பி2பியை விட்டுவிட்டு, கதிர்காமத்திற்கு நடந்திருந்தால் புண்ணியமாவது கிடைத்திருக்கும்!

பொத்துவிலில் இருந்து பொலிகண்டிக்கு சென்றவர்கள், கதிர்காமத்திற்கு கால்நடையாக சென்றிருந்தால், முருகனை தரிசித்த புண்ணியமாவது மிஞ்சியிருக்கும். இப்போது ஒன்றுக்கும் உதவாத நடைபயணத்தை செய்துள்ளார்கள் என கிண்டலடித்துள்ளார் கருணா என அழைக்கப்பட்ட விநாயகமூர்த்தி முரளிதரன்.

அம்பாறை  மாவட்டம்  காரைதீவு பகுதியில் உள்ள   06 ஆலயங்களின் நிருவாகத்தினருக்கு காசோலைகள் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனை தெரிவித்துள்ளார்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணி தேவையில்லாத ஒன்று. பொத்துவிலில் இருந்து பொலிகண்டிக்கு போகாமல், பொத்துவிலில் இருந்து கதிர்காமம் வரையில் நடந்து சென்றிருந்தால் முருகனை தரிசித்த புண்ணியமாவது கிடைத்திருக்கும் என தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தமிழ் மக்களுக்கு உதவும் இந்த காலகட்டத்தில் இதெல்லாம் தேவையா?  கண்டனப் பேரணி தேவையில்லாத ஒன்று என தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

நிஷாந்த முத்துஹெட்டிகமவின் விளக்கமறியல் நீடிப்பு!

Pagetamil

‘அந்தப் பெண் கடந்தகாலத்தை பற்றி சொன்னதால் பீதியானேன்’: தனுஷ்க குணதிலக!

Pagetamil

யாழ் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்

Pagetamil

இன்று இலங்கையர்கள் தூங்கும் போது ஜனாதிபதி செய்யப்போகும் காரியம்!

Pagetamil

ஈஸ்டர் தாக்குதல் உண்மையை கண்டறிய சர்வதேச விசாரணை தேவை

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!