25 C
Jaffna
February 12, 2025
Pagetamil
மலையகம்

நுவரெலியாவில் 25,098 பரீட்சார்த்திகள்!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையை எதிர்கொள்வதற்கு நுவரெலியா மாவட்டத்தில் பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள மாணவர்கள் இன்று (01) ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

ஆன்மீக நிலையங்கள் மற்றும் வீடுகளில் இறை வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் பெற்றோரும், பொறுப்பாளர்களும் பிள்ளைகளை பரீட்சை நிலையங்களை நோக்கி வாழ்த்தி, வழியனுப்பி வைத்தனர்.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு நுவரெலியா மாவட்டத்திலிருந்து இம்முறை 25 ஆயிரத்து 98 மாணவர்கள் தோற்றுகின்றனர். 179 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கொரோனாவினால் பல்வேறு சந்தர்ப்பங்களில் பிற்போடப்பட்ட கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையை சுகாதார வழிகாட்டுதல்களின் இன்று (01.03.2021) ஆரம்பமானது. இதனையொட்டி நேற்று பரீட்சை நிலையங்கள் தொற்று நீக்கம் செய்யப்பட்டது.

க.கிஷாந்தன்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரயிலில் மோதி ஒருவர் பலி

east tamil

தலவாக்கலையில் தோட்டத் தொழிலாளர்களிடம் பெரும் மோசடி: சிஐடியில் முறைப்பாடு!

Pagetamil

ஹட்டன் கொட்டகல வைத்திய சாலையில் இறந்தவரை இனங்காண பொலிஸ் உதவி கோரல்

east tamil

கண்டி ஹோட்டலில் குரங்குகளின் குறும்பு: வேடிக்கையில் மக்கள்

east tamil

மண்சரிவு அபாயம் – நுவரெலியாவில் 36 பேர் வெளியேற்றம்

east tamil

Leave a Comment