Pagetamil
தமிழ் சங்கதி

எமது கட்சியை உடைக்கிறார் மாவை; ரெலோ குற்றச்சாட்டு: மாவையுடன் தொடர்பிலுள்ளவர்களிற்கு விசாரணை!

தமிழீழ விடுதலை இயக்கத்தை (ரெலோ) பலவீனப்படுத்தும் நடவடிக்கையில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா ஈடுபட்டு வருவதாக, அந்த கட்சியின் தலைமைக்குழு குற்றம்சாட்டியுள்ளது.

நேற்று (28) வவுனியாவில் ரெலோவின் தலைமைக்குழு கூட்டம் நடந்த போது, இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இது குறித்து நேற்று தலைமைக்குழுவில் உறுப்பினர்கள் கருத்து வெளியிடும்போது,

ரெலோவினால் நாடாளுமன்ற அங்கத்துவம் வழங்கப்பட்ட கோடீஸ்வரனை இலங்கை தமிழ் அரசு கட்சி தனக்குள் கழற்றி எடுத்தது. அது குறித்து கேட்டபோது, கோடீஸ்வரனின் குடும்பம் பரம்பரை தமிழ் அரசு கட்சியினர் என மாவை சேனாதிராசா பொறுப்பில்லாமல் பதில் சொன்னார்.

ஆனால், பின்னர் அவர் தோல்வியடைந்த பின்னர் தமிழ் அரசு கட்சி கண்டுகொள்ளவில்லை. அவருக்கு தேசியப்பட்டியலும் வழங்கவில்லை. அவர்களிற்கு பதவியில் உள்ளவர்கள்தான் வேணும்.

இப்பொழுதும் ரெலோவின் யாழ் மாவட்ட உறுப்பினர்கள் சிலரை தன்னுடன் மாவை சேனாதிராசா வைத்துள்ளார். மாவை சேனாதிராசாவுடன் இணைந்து செயற்படும் உறுப்பினர்கள் சிலரை அழைத்து விளக்கம் கேட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து, வரும் திங்கள்கிழமை அவர்களை அழைத்து விளக்கம் கேட்பதென முடிவாகியுள்ளது.

இதையும் படியுங்கள்

ஐங்கரநேசனின் அதிர்ச்சி நிபந்தனையால் பேச்சை கைவிட்டது தமிழ் அரசு கட்சி!

Pagetamil

கள்ளக்காதல் இனித்தது; பகிரங்க உறவு கசக்கிறது: மணியின் மான் குட்டிகளின் விபரீத சிந்தனை!

Pagetamil

உட்கட்சி மோதல் உச்சம்… 4வது வழக்கில் மத்தியகுழு முடக்கப்படலாம்: இலங்கை தமிழ் அரசு கட்சி ஸ்தம்பிக்கும் நிலை!

Pagetamil

மாவை கட்சியின் தலைவரா?… இல்லையா?: 5 மணித்தியாலங்கள் மல்லுக்கட்டியும் தமிழரசு மத்தியகுழுவில் முடிவில்லை!

Pagetamil

தேர்தல் தோல்வியுடன் சங்கு அணியில் குழப்பம்: 3 சிறிய கட்சிகளை வெளியே அனுப்ப முயற்சி!

Pagetamil

Leave a Comment