27.2 C
Jaffna
February 7, 2025
Pagetamil
உலகம்

அழிந்து போனதாக கருதப்பட்ட பறவை 170 வருடங்களின் பின் தென்பட்டது!

அழிந்து போனதாக கருதப்பட்ட கருப்பு நிற கண்கள் கொண்ட பப்லர் பறவை, 170 ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக இந்தோனேஷியாவில் தென்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவின் போர்னியோ மழைக்காடுகளில் 170 ஆண்டுகளுக்கு முன்பு கருப்பு கண்களை கொண்ட பப்லர் பறவை இனம் வாழ்ந்த வந்தது. கடைசியாக 1848 ஆம் ஆண்டு காணப்பட்டதாக ஆவணப்படுத்தப்பட்ட இந்த பறவை, அதன் பின் யார் கண்ணிலும் படவில்லை. அதனை கண்டுபிடிக்க எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.

இதனால் அந்த பறவையினம் அழிந்து போனதாக கருதப்பட்டது. அழிந்து போன பறவையினங்களில் அதுவும் பட்டியல்ப்படுத்தப்பட்டு விட்டது.

இந்நிலையில், கடந்த ஆண்டு போர்னியோவின் மழைக்காடுகளில் இந்த பறவையினம் மீள கண்டறியப்பட்டுள்ளது.

முஹம்மது சுரான்டோ மற்றும் முஹம்மது ரிஸ்கி என்ற இருவர் காட்டுக்குள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த போது, வித்தியாசமான பறவையினம் என கருதி அதை பிடித்து படம் எடுத்து விட்டு பறக்க விட்டுள்ளனர். எனினும், அது பப்லர் பறவையென்பது அவர்களிற்கு தெரியாது.

அந்த புகைப்படம் வெளியாகி, அது பறவை கண்காணிப்பு குழுவின் கண்ணில் பட்டபின்னர்தான், அந்த பறவை பற்றிய தகவல் வெளியானது.

“இது போன்ற கண்டுபிடிப்புகள் நம்பமுடியாதவை. பல தசாப்தங்களாக அல்லது அதற்கு மேலாக காணாமல் போன பிற உயிரினங்களையும் கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது’’ என உலக வனவிலங்கு பாதுகாப்புஅமைப்பும் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு ட்ரம்ப் தடை

east tamil

விற்ற வீட்டில் புது ஓனருக்கு தெரியாமல் 7 ஆண்டுகள் வாழ்ந்த கில்லாடி பெண்

east tamil

இஸ்ரேலும் மனித உரிமை ஆணைக்குழுவில் இருந்து விலகல்

east tamil

யூதர்களுக்கு ஆதரவாக மனித உரிமை பேரவையில் இருந்து விலகிய அமெரிக்கா

east tamil

திருநங்கைகள் விளையாட்டில் பங்கேற்க தடை – ட்ரம்ப்

east tamil

Leave a Comment