Pagetamil
இலங்கை

வவுனியாவில் வர்த்தக நிலையத்தில் திடீர் தீவிபத்து!

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் அமைந்துள்ள பலசரக்கு விற்பனை நிலையம் இன்று (28) மாலை தீபிடிந்து எரிந்தமையால் பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியது.

குறித்த வர்த்தக நிலையம் இன்று மாலை திறக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாலை 5 மணியளவில் திடீரென்று கடை தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதனை அவதானித்த அங்கிருந்த இளைஞர்கள் மற்றும் கிராமமக்கள் தீயை அணைப்பதற்கு கடுமையான முயற்சிகளை எடுத்தபோதும் வியாபார நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பொருட்களும் முற்றாக எரிந்து சாம்பலாகியது.

சுமார் 6 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்துள்ளதாக வியாபார நிலைய உரிமையாளரால் தெரிவிக்கப்படுகின்றது.

மின்சார ஒழுக்கி தீவிபத்திற்கு காரணமாக இருக்கும் என்று தெரிவிக்கப்படும் நிலையில் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்

தேசபந்துவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் பாய்கிறது!

Pagetamil

கிளிநொச்சியை உலுக்கிய சிறார் துஸ்பிரயோக குற்றச்சாட்டு: புலிகள் அமைப்பிலும் இதே குற்றச்சாட்டை சந்தித்தவர்!

Pagetamil

மோடி- அனுர 15 நிமிடங்கள் தொலைபேசி உரையாடல்

Pagetamil

பிக்கு உடையில் தலதா மாளிக்கைக்குள் நுழைய முயன்ற மாணவன்!

Pagetamil

18 மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை

Pagetamil

Leave a Comment