வடக்கில் இன்று 62 பேர்… யாழ் சிறையில் 51 பேருக்கு தொற்று!

Date:

வடக்கில் இன்று 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 51 பேர் யாழ்ப்பாண சிறைச்சாலை கைதிகளாவர்.

இன்று யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வவுகூடத்தில் 387 பேரின் பிசிஆர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

அதில் 10 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 4 பேர், மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒருவர், வேலங்குளம் தனிமைப்படுத்தல் மையத்தில் ஒருவர், சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர், ஒமேகா நிறுவனத்தில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 236 பேரின் பிசிஆர் மாதிரிகள் ஆய்வுசெய்யப்பட்டன. இதில் 52 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

இதில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 51 பேரும், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருந்து ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க- ஈரான் ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது: அனைத்து முனைகளிலும் போருக்கு முற்றுப்புள்ளி!

லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் இராணுவ நடவடிக்கைகளுக்கு "உடனடி மற்றும் நிரந்தர"...

இன்னும் சில மணி நேரத்தில் அமைதி ஒப்பந்தம்: ட்ரம்ப்

மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் இன்னும் சில "மணிநேரங்களில்"...

சுரேஷ் சாலேவை மிரட்டி மருந்து கொடுத்த தாதி!

ஈஸ்டர் ஞாயிறு அன்று நடந்த தொடர் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்