Pagetamil
இலங்கை

மன்னாரில் இடம் பெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் இளைஞர் சம்மேளன பொதுக்கூட்டம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நான்காவது வருடாந்த சம்மேளன பொதுக்கூட்டமும் மன்னார் தேர்தல் தொகுதிக்கான இளைஞர் சம்மேளன பொதுக்கூட்டம் காலை 10.30 மணியளவில் மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம் பெற்றது.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான கே. காதர் மஸ்தான் தலைமயில் இடம் பெற்ற இளைஞர் சம்மேளன பொது கூட்டத்தில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான அசோக பிரியந்த கலந்து கொண்டிருந்தார்.

இதன் போது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மன்னார் மற்றும் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது நூற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகள் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.இதன் போது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டதோடு,இளைஞர் யுவதிகளின் செயற்பாடுகள்,எதிர் கால நிலைப்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டடது.

இதையும் படியுங்கள்

முழு உலகத்துக்குமான ஆன்மீக தலைவராக பணியாற்றியவர் பாப்பரசர்

Pagetamil

யாழ் மாநகரசபை தேர்தலில் யாரை ஆதரிப்பதென விரைவில் அறிவிப்போம்: மணிவண்ணன்!

Pagetamil

தேர்தல் ஆணைக்குழு சுதந்திரமாக செயற்படுகிறதா?: மணிவண்ணன் சந்தேகம்!

Pagetamil

தென்னக்கோனை விடாது துரத்தும் வழக்குகள்!

Pagetamil

உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனு நிராகரிப்பு: 60 மனுக்களை நிராகரித்தது மேல்முறையீட்டு நீதிமன்றம்!

Pagetamil

Leave a Comment