ஜமால் கஷோகி படுகொலையுடன் சவுதி இளவரசருக்கு நேரடி தொடர்பு: சி.ஐ.ஏ அறிக்கை வெளியிடப்பட்டது!

Date:

பத்திரிகையாளர் ஜமால் கஷோகியைக் கைதுசெய்வது அல்லது படுகொலை செய்வதற்கான நடவடிக்கைக்கு சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

2018 இல் துருக்கியிலுள்ள சவுதி தூதரகத்தில் இடம்பெற்ற கஷோகி படுகொலை தொடர்பான உளவுத்துறை அறிக்கையை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவம் நடந்த உடனேயே, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் படுகொலையில் நிச்சயம் ஈடுபட்டிருப்பதை அமெரிக்க சிஐஏ உறுதிப்படுத்தியது.

“துருக்கியின் இஸ்தான்புல்லில் சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகியைக் கைது செய்ய அல்லது படுகொலை செய்வதற்கான நடவடிக்கைக்கு சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஒப்புதல் அளித்துள்ளார் என்று நாங்கள் மதிப்பிடுகிறோம்” என்று அந்த அறிக்கை ச் சுருக்கத்தில் தெரிவித்துள்ளது.

நான்கு பக்க அறிக்கையில் காஷோகியின் மரணத்தில் பங்கேற்ற அல்லது உடந்தையாக இருந்த 21 நபர்களின் பெயர்கள் உள்ளன. இஸ்தான்புல்லில் இந்த நடவடிக்கை முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்தாலும், அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் அவருக்கு தீங்கு விளைவிக்கும் முடிவு எப்போது எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை என்று கூறினார்.

“இந்த நடவடிக்கை காஷோகியின் மரணத்திற்கு வழிவகுக்கும் என்பதை இந்த நபர்கள் முன்கூட்டியே அறிந்திருந்தார்களா என்பது எங்களுக்குத் தெரியாது,” என்று அறிக்கை கூறியது.

ஜோ பிடனின் நிர்வாகத்தால் பகிரங்கப்படுத்தப்படுவதற்கு முன்னர் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட உளவுத்துறை அறிக்கை இன்று காங்கிரசுக்கு வெளியிடப்பட்டது.

கடந்த வியாழக்கிழமை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் மற்றும் சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல்அஸிஸ் அல்-சவுத் ஆகியோரும் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டனர்.

இந்த 04 பக்க உளவுத்துறை அறிக்கையில் ஜமால் கஷோகி படுகொலை செய்யப்பட்டமை மற்றும் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் சம்பந்தப்பட்ட நடவடிக்கையில் ஈடுபட்டது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

“2017 ஆம் ஆண்டு முதல், இளவரசருக்கு இராச்சியத்தின் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை சேவைகளில் முழுமையான கட்டுப்பாடு உள்ளது. மேலும் சவுதி அதிகாரிகள் இளவரசரின் அனுமதியின்றி இதுபோன்ற ஒரு நடவடிக்கையை மேற்கொள்வது சாத்தியமில்லை” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டில், துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரகத்தில் ஜமால் கஷோகி படுகொலை செய்யப்பட்டதாக 15 பேர் கொண்ட குழு மீது குற்றம் சாட்டப்பட்டது. பின்னர், வெளிநாடுகளில் இருந்து கடுமையான அழுத்தத்தை எதிர்கொண்ட நிலையில், இந்த நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் சவுதி பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிக்கு கொண்டு வரப்பட்டு அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் சவுதி அரேபியாவின் இளவரசரின் பாதுகாப்புக்கு பொறுப்பான குழுவில் ஏழு உறுப்பினர்கள் அடங்குவர்.

இந்த அறிக்கை வெளியிடப்பட்டவுடன், ஜனாதிபதி ஜோ பிடன் எதிர்காலத்தில் சவுதி ஆட்சிக்கு எதிராக சில தண்டனைகளை விதிப்பார் என்று அமெரிக்க அதிகாரிகள் நம்புகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

யாழில் பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 17 வயதானவர் போதைப்பொருள் பாவித்திருந்தார்!

வேலணை - அல்லைபிட்டிப் பகுதியில் வீதிக்காவல் கடடையிலிருந்த பொலிசாரின் உத்தரவை மீறி...

சிம் அட்டை மீள் பதிவு செய்ய அமைச்சரவை அனுமதி!

2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 02 ஆம் திகதிக்கு முன்னர்...

யாழில் துப்பாக்கியுடன் பச்சை மிளகாய் வாங்க வந்தவர் கைது!

யாழ்ப்பாணம் மருதனார்மடம் சந்தையில் பச்சை மிளகாய் வாங்க வந்தவர் கொண்டு வந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்