28 C
Jaffna
December 5, 2023
இலங்கை

ஹிஸ்புல்லாவை ஆஜர்படுத்தக் கோரிய மனு வாபஸ்!

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலாளிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டு, குற்றவியல் புலனாய்வுத் துறையால் (சிஐடி) கைது செய்யப்பட்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் திரும்பப் பெறப்பட்டது .

ஹிஸ்புல்லாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவிடுமாறு மனுதாரர் கோரியிருந்தார்.

மனுதாரர் தரப்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரோமேஷ் டி சில்வா தனது வாடிக்கையாளர் ஏற்கனவே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதால் மனுவை வாபஸ் பெற நீதிமன்றத்தின் அனுமதியைக் கோரினார். அதன்படி, மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சோபித ராஜகருணா மற்றும் நீதிபதி தம்மிக கணேபொ ஆகியோர் மனுவை வாபஸ் பெற அனுமதித்தனர்.

மனுவில் பிரதிவாதிகளாக பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, சிஐடி இயக்குநர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெளிநாடு செல்ல விடுமுறை எடுத்தாலும் இலங்கையில் வேறு வேலை பார்க்கும் பல்கலைக்கழக ஆசிரியர்கள்!

Pagetamil

வடமாகாணத்தில் ரூ.50 இலட்சம் பெறுமதியான வீட்டுத் திட்டத்துக்கு விண்ணப்பிக்காதவர்களுக்கான அறிவிப்பு!

Pagetamil

புதுமுறிப்பு குளத்திலிருந்து மீன்கள் வெளியேறாமல் தடுப்பு வலை

Pagetamil

ஷானி அபேசேகரவை வாகன விபத்தில் கொலை செய்ய சதித்திட்டம்!

Pagetamil

காசாவில் வந்தால் இரத்தம்… தமிழர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?: இலங்கை முஸ்லிம்களிம் கேட்கிறார் சபா.குகதாஸ்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!