ஹிஸ்புல்லாவை ஆஜர்படுத்தக் கோரிய மனு வாபஸ்!

Date:

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலாளிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டு, குற்றவியல் புலனாய்வுத் துறையால் (சிஐடி) கைது செய்யப்பட்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் திரும்பப் பெறப்பட்டது .

ஹிஸ்புல்லாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவிடுமாறு மனுதாரர் கோரியிருந்தார்.

மனுதாரர் தரப்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரோமேஷ் டி சில்வா தனது வாடிக்கையாளர் ஏற்கனவே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதால் மனுவை வாபஸ் பெற நீதிமன்றத்தின் அனுமதியைக் கோரினார். அதன்படி, மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சோபித ராஜகருணா மற்றும் நீதிபதி தம்மிக கணேபொ ஆகியோர் மனுவை வாபஸ் பெற அனுமதித்தனர்.

மனுவில் பிரதிவாதிகளாக பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, சிஐடி இயக்குநர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதில் உள்ள சவால்கள் என்ன?

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்களைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்கான வழிகளை பென்டகன்...

லிட்ரோ எரிவாயு விலைகள் எகிறின!

நேற்று (10) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு...

மின்சாரசபை ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடரும் என அறிவிப்பு!

தமது கோரிக்கைகளுக்குச் சாதகமான பதில் கிடைக்கும் வரை தற்போதைய வேலைநிறுத்தப் போராட்டத்தை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்