இராணுவ வாகனம், சீருடை: 45 கிலோ ஹெரோயினுடன் இரு இராணுவத்தினர் கைது!

Date:

இராணுவத்தி்ற்கு சொந்தமான சொகுசு வாகனத்தில் போதைப்பொருள் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் இராணுவத்தை சேர்ந்தவர்கள். கைது செய்யப்பட்ட போது இராணுவச்சீருடையில் காணப்பட்டனர்.

அருகொட சாலித என்ற பெரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரின் ரூ .450 மில்லியனுக்கும் அதிகமான ஹெராயினுடன் அவர்கள், ஹொரண, திகேனபுர பகுதியில் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.

தெற்கு மாகாணத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் பாதாள உலகத் தலைவரான மிதிகம சிந்தக அல்லது ‘ஹரக் கட்டா’ என்பவரிடமிருந்து போதைப்பொருட்களைப் பெற்ற பின்னர், ஹொரண, திகேனபுர பகுதியில் உள்ள தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இருந்து திரும்பி வரும்போது இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

இராணுவத்திற்கு சொந்தமான சொகுசு வாகனத்தில் 45 கிலோவிற்கு அதிகமான போதைப்பொருட்களை கொண்டு செல்லும்போது சந்தேக நபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டபோது இரு வீரர்களும் இராணுவ சீருடை அணிந்திருந்ததாக பொலிசார் கூறுகின்றனர்.

அட்டீடிய மற்றும் மருதானை இராணுவ முகாம்களை சேர்ந்தவர்கள் என்பதும், வாகனம் அட்டீடியா இராணுவ முகாமில் உள்ள ஒரு படைப்பிரிவுக்கு சொந்தமானது என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.இராணுவத் தேகை்காக வாடகைக்கு எடுக்கப்பட்ட வாகனமே அது.

கைதானவர்களில் ஒருவர் இராணுவத்தை விட்டு தப்பியோடியவர் என்றும், மற்றைய அதிகாரிக்கு எதிராக கடுமையான நடவடிக்கையெடுக்கப்படுமென இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

யோஷிதவின் பாட்டியின் மனநிலை அறிக்கையை பெப்ரவரியில் சமர்ப்பிக்க உத்தரவு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல்...

அர்ஜூன, சகோதரர் மீது கொழும்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

முன்னாள் பெற்றோலிய அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் அப்போதைய இலங்கை பெற்றோலிய...

இறந்தவரின் உடலை சென்று பார்வையிட முடியாத நிலையில் மல்லாவி வைத்தியசாலையின் பிரேத அறை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு,துணுக்காய் ஆகிய இரு பிரதேச மக்களின் அரச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்