25 C
Jaffna
February 12, 2025
Pagetamil
கிழக்கு

21 வயது யுவதியை அள்ளிச் சென்ற அடையாளம் தெரியாதவர்கள்!

மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றிறகு வெள்ளை வான் ஒன்றில் சென்ற 4 பேர் கொண்ட குழுவினர் இன்று (23) அதிகாலை வீட்டை உடைத்து தாக்குதலை நடாத்திவிட்டு நித்திரையில் இருந்த 21 வயதுடைய யுவதி ஒருவரை கடத்திச் சென்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

காதான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி ஜுனியர் வீதியில் உள்ள வீடு ஒன்றில் இரு பெண் பிள்ளைகள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் குறித்த வீட்டை சம்பவ தினமான இன்று அதிகாலை ஒரு மணிக்கும் 1.30 மணிக்கும் இடையில் வெள்ளைவான் ஒன்றில் வந்த குழுவினர் வீட்டின் வெளிக்கதவின் பூட்டினை உடைத்து வீட்டின் வாசல்கதவை உடைத்து உள்நுழைந்த போது வீட்டின் உரிமையாளர் அவர்களை பொல்லால் தாக்கிய போதும் அவர்கள் அவரை திருப்பி தாக்கிவிட்டு நித்திரையில் இருந்த 21 வயது யுவதியை கடத்திச் சென்றுள்ளார் .

சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தென்னை மரத்தில் ஏறிய இளைஞன் தவறி விழுந்து உயிரிழப்பு

Pagetamil

சட்டவிரோதமாக வலம்புரி சங்குகள் விற்பனைக்கு முயற்சித்த மூவர் கைது

east tamil

குமாரபுரம் படுகொலைக்கு அனுரவிடம் கோரப்படும் நீதி

east tamil

திருகோணமலையில் விபத்து

east tamil

25 வருடங்களாக இலவசமாக கலை வளர்க்கும் முத்துக்குமார சுவாமி ஆலயம்

east tamil

Leave a Comment