O/L முடிவுகள் ஜூன் மாதம்!

Date:

மார்ச் 01 முதல் 10ஆம் திகதிவரை நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்வரும் ஜூன் மாதத்தில் வெளியிட முடியும் என எதிர்ப்பார்ப்பதாக கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய ஜூன் மாதத்தில் இருந்து உயர்தர வகுப்புகளை ஆரம்பிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நெலும் மாவத்தையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இன்று(22) இதனைக் கூறியுள்ளார்.

O/L தேர்வுக்கான COVID-19 சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் ஏற்பாடுகள் பொது சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் சுகாதார மருத்துவ அலுவலகங்களால் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

தற்போது மாணவர்களின் அனுமதி அட்டைகள் பாடசாலைகளில் விநியோகிக்கப்பட்டுள்ளன. அனுமதி அட்டைகளைப் பெறாத தனியார் விண்ணப்பதாரர்கள் பரீட்சைகள் திணைக்களத்தின் வலைத்தளத்தைப் பார்வையிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதல்முறையாக பரீட்சைக்கு தோற்றும் மாணவர் ஒருவர் தேவைப்பட்டால் வலைத்தளத்தின் மூலம் தேவைப்பட்டால் பெயர், பொருள் மற்றும் பாடம், மொழி மூலத்தை திருத்த முடியும் என்றார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வெயின் உச்சம் ஆபத்தான நிலைமைகளில் மாடுகள்

தற்போது நிலவி வரும் கடும் வெயில் காரணமாக யாழ்ப்பாணம் ஊர்காவற்துறைபிரதேசங்களில் மாடுகள்...

முழங்காவிலில்  சமத்துவக் கட்சியின் மே தின கூட்டம்

சமத்துவ கட்சியின் மே தின கூட்டம் கிளிநொச்சி முழங்காவில் நாச்சிக்குடா சந்தியில்...

வீதியை தடைசெய்த எல்லையை அகற்றுமாறு தையிட்டி விகாரைக்கு அறிவித்தல்

தையிட்டி பவானி வீதியினை தடைசெய்து இடப்பட்டுள்ள எல்லையை எதிர்வரும் மே மாதம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்