25 C
Jaffna
February 12, 2025
Pagetamil
இலங்கை

சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகிலிருந்த பிள்ளையார் சிலை மாயம்!

பூநகரி சங்குபிட்டி பாலத்திற்கு அருகில் இரண்டு ஆலமரத்திற்கு கீழ்
அண்மையில் வைக்கப்பட்ட பிள்ளையார் சிலையை கடந்த சில தினங்களாக காணவில்லை என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஏ9 32 வீதியில் சங்குபிட்டி பாலத்திற்கு அருகில் இரண்டு ஆலமரங்களுக்கு கீழ் புதிதாக பிள்ளையார் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

குறித்த பிள்ளையார் சிலையானது இதே வீதியில் தற்போது பொலீஸ் காவல் நிலையம் இருக்கும் இடத்திற்கு அருகில் முன்னர் இருந்த பிள்ளையாருக்காக
வைக்கப்பட்டிருக்கலாம் எனவும், வீதியோரமாக வைக்கப்பட்டிருந்த பிள்ளையார்
சிலையானது தங்களது அனுமதியின்றி, தங்கள் எல்லை பரப்புக்குள்
வைக்கப்பட்டிருப்பதாகவும் அதனை அகற்றப் போவதாகவும், கிளிநொச்சி வீதி
அபிவிருத்தி அதிகார சபையினர் கடந்த வாரம் பூநகரி பிரதேச செயலாளர் மற்றும்
பூநகரி பொலீஸ் நிலையத்தில் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் தற்போது குறித்த பிள்ளையார் சிலை காணாமல் போயுள்ளது.

இதனை வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் அகற்றியிருக்கலாம் என பொது மக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். பிள்ளையாருக்கு பதிலாக புத்தர் சிலை
வைக்கப்பட்டிருந்தால் அதனை சட்டத்தை காட்டி அதிகாரிகள் அகற்றுவார்களா
எனவும் கேள்வி எழுப்பும் பொது மக்கள் மத ரீதியாக பாரபட்சங்கள்
எதிர்காலத்தில் தவிர்க்கப்படல் வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
3

இதையும் படியுங்கள்

மருத்துவ எரியூட்டியால் பாதிப்பு – நிரந்தர தீர்வு வேண்டி ஆர்ப்பாட்டத்தில் மக்கள்

east tamil

எரிபொருள் நிலையத்திற்கு அருகே ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி

east tamil

சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளை விரைவுபடுத்த புதிய நடவடிக்கை

east tamil

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் மோதல் CCTV காட்சிகள்

east tamil

ஓரினச்சேர்க்கையை சமூகமயப்படுத்த பணம் பெற்ற பிரதமர் ஹரிணி பதவி விலக வேண்டும் – அக்மீமன தயாரத்ன தேரர்

east tamil

Leave a Comment