24.5 C
Jaffna
February 17, 2025
Pagetamil
இலங்கை

பழ.நெடுமாறன் நலம் பெற வேண்டி இன்று நல்லூரில் வழிபாடு!

கோவில் – 19 நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் பழ.நெடுமாறன் நலம் பெற வேண்டி இன்று நல்லூரில் சிறப்பு வழிபாடு இடம்பெற்றது.

கொவிட்-19 தொற்றினால் சில தினங்களுக்கு முன்னர் பாதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 83 வயதான பழ நெடுமாறன் இலங்கைத் தமிழ் மக்களின் மீது தீவிர பற்று கொண்டவர்.

தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவராகிய பழ நெடுமாறன் விரைவில் நலம் பெற்று வீடு திரும்புவதற்கு இந்த சிறப்பு வழிபாடு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று காலை இடம்பெற்றது.

சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் தலைமையில் இடம் பெற்ற இந்த சிறப்பு வழிபாட்டில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சரும், ஈழத் தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமுமான அனந்தி சசிதரனும் கலந்து கொண்டார்.

ஈழத்தமிழர் போராட்டத்தில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக தன்னை அர்ப்பணித்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர் பழ.நெடுமாறன் என்பது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

2021யில் காணாமல் போன துப்பாக்கி கண்டுபிடிப்பு

east tamil

வேலையில்லா பட்டதாரிகளின் ஆதங்கம்

east tamil

இலங்கையில் சிறுநீரக நோய்களால் ஆண்டுக்கு 10000 பேர் இறப்பு

east tamil

“லிட்டில் ஹார்ட்ஸ்” இணைய பணமோசடியில் இருவர் கைது

east tamil

தீயில் எரிந்த சாவகச்சேரி உதவி பிரதேச செயலாளர் சிகிச்சை பலனின்றி மரணம்!

Pagetamil

Leave a Comment