ரி 56 துப்பாக்கி தோட்டாவுடன் பொலிஸ் அதிகாரி கைது!

Date:

ரி-56 ரக துப்பாக்கி தோட்டாக்கள் 15 தன் வசம் வைத்திருந்த பொலிஸ் அதிகாரியொருவர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குள் நுழைய முயன்ற போது இன்று (19) விமான நிலைய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை விஜயத்திற்கான சிறப்பு ஒத்திகை திட்டம் கட்டூநாயக்க விமான நிலையத்தில் நடந்து வரும் போது இந்த சம்பவம் நடந்தது.

சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் போதைப்பொருள் பணியகத்துடன் இணைக்கப்பட்ட துணை ஆய்வாளர் ஆவார்.

தோட்டாக்களுடன் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் நுழைய முயன்றபோது பாதுகாப்பு படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், கட்டுநாயக்க விமான நிலைய பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். சந்தேகநபர் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மார்ச் 01 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கதுட்டுநாயக்க விமான நிலைய பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மகனின் தலைமைத்துவ திறனில் சந்தேகம் கொண்டிருந்த அலி கமேனி

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அலி கமேனி தனது மகன் மொஜ்தபா...

மோதலை முடிவுக்கு கொண்டு வர ஈரானின் 2 நிபந்தனைகள்

அமெரிக்கா மற்றும் ஈரானிய தலைமை இரண்டும் போர் நிறுத்தத்திற்கான சாத்தியத்தை பகிரங்கமாக...

11 அணுகுண்டுகளை தயாரிக்கப் போவதாக நாம் சொல்லவேயில்லை… ஈரானிய வெளிவிவகார அமைச்சர் வெளிப்படுத்தும் தகவல்!

அணு குண்டுகளை உருவாக்க யுரேனியத்தை செறிவூட்டியதாக ஈரானியர்கள் தம்மிடம் தெரிவித்ததாக அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்