வடக்கில் இன்று இதுவரை 17 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ் போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடத்தில் இன்று 379 மாதிரிகள் பரிசோதனைக்குள்ளாக்கப்பட்டன. இதில் 17 பேருக்கு தொற்று உறுதியானது.
வெள்ளாங்குளம் தனிமைப்படுத்தல் மையத்தை சேர்ந்த 5 பேர், மன்னார் சுகாதார வைத்தியஅதிகாரி பிரிவில் ஒருவர், வவுனியா பொது வைத்தியசாலையில் ஒருவர், பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.