கட்சியின் கோபக்காரர்களுடன் உறுப்பினர்களும் கதைக்க முடியாது: கஜேந்திரன் ‘குபீர்’ உத்தரவு!

Date:

தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் முரண்பட்ட யாருடனும் கதைக்கக் கூடாதென, முன்னணியின் உறுப்பினர்களிற்கு கண்டிப்பான கட்டளை வழங்கியுள்ளார் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன்.

இந்த உத்தரவினால், உறுப்பினர்கள் பலர் தலையில் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

யாழ் மாநகரசபையில் அங்கம் வகிக்கும் முன்னணியின் உறுப்பினர்கள் சிலரையே, முன்னணி கட்சியை விட்டு நீக்க நடவடிக்கையெடுத்தது. அதற்கு நீதிமன்றம் தற்காலிக தடைவிதித்துள்ளது.

அவர்கள் மணிவண்ணனை ஆதரித்தார்கள் என்ற காரணத்தினாலேயே கட்சியை விட்டு நீக்க நடவடிக்கையெடுக்கப்பட்டது.

இதுவரை கட்சியில் ஒன்றாக இருந்தவர்கள், அரசியலுக்கு அப்பாலும் நட்பாக இருப்பவர்கள் தமக்குள் நட்புறவை பேணுவது வழக்கம். அப்படி பல உறுப்பினர்கள் பிறந்தநாள் நிகழ்வில் கலந்து கொண்டனர். மணிவண்ணன் அணியும் கலந்து கொண்டது. கஜேந்திரர் அணி பக்கமுள்ள ஒருவரும் கலந்து கொண்டார். நீணடநாள் நட்பின் அடிப்படையில், அவர் பிறந்ததின நிகழ்வில் கலந்து கொண்டார்.

நீண்டநாள் நட்பின் அடிப்படையில் கலந்து கொண்டதாக அவர் விளக்கமளித்துள்ளார்.

கட்சியில் அங்கம் வகிப்பதென்றால், கட்சி கதைக்காமல் விடுபவர்களுடன் உறுப்பினர்களும் கதைக்க முடியாது என கண்டிப்பான கட்டளை பிறப்பித்துள்ளார்.

“நீங்கள் எந்தப்பக்கம் என்பதை முடிவெடுங்கள்“ என்றும் செயலாளர் கூறியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

திருமணமானவருடன் காதல்: ஆடைத்தொழிற்சாலை யுவதிக்கு நேர்ந்த பயங்கரம்!

கஹதுடுவ ஆடைத் தொழிற்சாலை ஊழியரான யுவதி, தொழிற்சாலையில் பணியாற்றும் ஒரு தொழிலாளியால்...

ஈரானிய கப்பலில் இருந்த 87 பேரின் சடலங்கள் மீட்பு!

இலங்கைக்கு அருகில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பலின் தாக்குதலில் மூழ்கிய ஈரானிய போர்க்...

இரண்டாம் உலகப்போரின் பின் இலங்கை கடற்கரையில் நடந்த சம்பவம்!

சனிக்கிழமை போரின் தொடக்கத்தில் இருந்ததை விட ஈரான் குறைவான ஏவுகணைகளை ஏவுகிறது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்