இன்ஸ்டகிராமில் ரீல்ஸ் பதிவிட விரும்பிய மனைவியை எரித்துக் கொன்ற கொடூர கணவன்!

Date:

உத்தர பிரதேச மாநிலம் கிரேட்​டர் நொய்டா பகு​தி​யைச் சேர்ந்​தவர் விபின். இவர் கடந்த 2016-ம் ஆண்டு நிக்கி என்ற பெண்ணை திரு​மணம் செய்து கொண்​டார். இந்த தம்​ப​திக்கு 6 வயதில் மகன் உள்​ளார்.

விபின்​-நிக்கி திரு​மணத்​தின்​போது பெண்​ வீட்​டார் சொகுசு கார், பல சவரன் நகை உள்​ளிட்​ட​வற்றை வரதட்​சணை​யாக கொடுத்​துள்​ளனர். இருப்​பினும், அது போ​தாது என கூறி ரூ.36 லட்​சம் பணம் கேட்டு நிக்​கி​யின் கணவர் மற்​றும் அவரது குடும்​பத்​தினர் பல ஆண்​டு​களாக அடித்து துன்​புறுத்தி வந்​துள்​ளனர்.

இந்த பின்னணியில், நிக்கி இன்ஸ்டகிராமில் வீடியோக்களை பதிவேற்றியுள்ளார். இதற்கு கணவர், மாமியார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நிக்கியின் சகோதரியும் அதே குடும்பத்தில்தான் திருமணம் செய்துள்ளார். தனது சகோதரியுடன் இணைந்து அழகு நிலையம் ஒன்றை திறக்க நிக்கி திட்டமிட்டார். இதற்கு கணவர், மாமியாரின் அனுமதி கிடைக்கவில்லை. தமது குடும்பத்தில் பெண்கள் இன்ஸ்டா ரீல் பதிவிடுவது, வேலை செய்வது தடைசெய்யப்பட்டுள்ளதாக கணவரும், மாமியாரும் கூறியுள்ளார்.

அழகுநிலையம் திறப்பது பற்றி மாமியாரிடம் நிக்கி பேசியதால், கோபமடைந்த கணவர், தனது தாயாருடன் சேர்ந்து நிக்கியை தீ வைத்து கொன்றுள்ளார்.

விபின் தனது தாயுடன் சேர்ந்து கொண்டு நிக்​கியை அடித்து துன்​புறுத்​தி​யதுடன் அவர் மீது திர​வம் ஊற்றி லைட்​ட​ரால் தீ வைத்து எரித்து கொடூர​மாக கொலை செய்​தார். இந்த சம்​பவம் அவரது 6 வயது மகன் கண் முன்னே நடந்​துள்​ளது.

நிக்கி தாக்கப்பட்டு தரையில் உதவியற்று உட்கார்ந்திருப்பதும், பின்னர் திரவம் ஊற்றப்பட்டு எரிக்கப்படுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. அந்த வீட்டிலிருந்த நிக்கியின் சகோதரி இதனை வீடியோ எடுத்துள்ளார்.

இதுகுறித்து அந்த சிறு​வன் கூறுகை​யில், “எனது தந்​தை, தாத்தா பாட்​டி​யுடன் சேர்ந்து எனது அம்​மாவை அடித்து துன்​புறுத்​தினர். பின்​னர் ஏதோ திர​வம் ஒன்றை அம்மா மீது ஊற்றி லைட்​ட​ரால் தீ வைத்​தனர்’’ என்று வாக்​குமூலம் அளித்​துள்​ளார்.

நிக்​கி​யின் இறப்​புக்கு காரண​மான விபின் உடனடி​யாக போலீ​ஸா​ரால் கைது செய்​யப்​பட்​டார். அவரது பெற்​றோர் மற்​றும் சகோதரர் தலைமறை​வாகி விட்​டனர். இந்த நிலை​யில், நேற்று போலீ​ஸின் பிடி​யில் இருந்து தப்​பிக்க முயற்சி செய்த விபினை நோக்கி போலீ​ஸார் துப்​பாக்​கி​யால் சுட்​டனர். இதில், அவரது காலில் குண்​டடிபட்​டது.

இதையடுத்​து, மருத்​து​வ​மனையில் விபின் சேர்க்கப்பட் டுள்ளார். மருத்​து​வ​மனை வளாகத்தை சுற்றி பலத்த பாது​காப்பு போடப்​பட்​டுள்​ளது. இந்த வழக்​கில் விபின் குடும்​பத்​துக்கு உள்ள தொடர்பு குறித்து வி​சா​ரணை நடந்து வரு​கிறது என போலீ​ஸார் தெரி​வித்​தனர்​.

நிக்கி அடிக்கடி கணவனால் தாக்கப்படுவதும், பின்னர் பிறந்த வீட்டுக்கு செல்வதும், கணவர் தரப்பு சமரசம் செய்து அழைத்து செல்வதும் வழக்கமான நிகழ்வாக இருந்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

உடல் பருமன், ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோய்கள் இருந்தால் அமெரிக்க விசா கிடையாது

இதய நோய், சுவாசக் கோளாறு, புற்றுநோய், நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, உடல்...

கறுப்பு யூலை: கற்காத பாடங்கள் நூல் அறிமுக நிகழ்வு

வடலி வெளியீட்டினரால் வெளியிடப்பட்ட தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ அவர்கள் எழுதிய கறுப்பு யூலை:...

யாழில் போதை நுகர்ந்த 3 பேர் சிக்கினர்

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த மூன்று பேர் கையும் களவுமாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்