முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது விதவைகளுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளை ரத்து செய்ய முயலும் ஜனாதிபதி உரிமைகள் (ரத்து செய்தல்) வரைவு சட்டமூலம், ஜூலை 31, 2025 அன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.
அதன்படி, இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட நாளில் இருந்து பின்வரும் உரித்துரிமைகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகள் அல்லது முன்னாள் ஜனாதிபதியின் விதவைக்கு குடியிருப்பு, மாதாந்திர கொடுப்பனவு, மாதாந்திர செயலக கொடுப்பனவு, உத்தியோகபூர்வ போக்குவரத்து மற்றும் பிற வசதிகள் போன்ற சிறப்பு சலுகைகளை வழங்குவதை வரைவு சட்டமூலம் தடுக்கிறது.



