சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஆந்த்ரே ரஸல் ஓய்வு!

Date:

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் சகலதுறை வீரரான ஆந்த்ரே ரஸல் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

வரும் 2026ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இந்தியா மற்றும் இலங்கையில் ரி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறவுள்ள நிலையில், ரஸலின் ஓய்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இவர், மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்காக 84 ரி20, 56 ஒருநாள் மற்றும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் 2012, 2016ஆம் ஆண்டுகளில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி ரி20 உலகக் கோப்பையை வென்றபோது அந்த அணியில் ரஸலும் இடம்பெற்றிருந்தார்.

ஓய்வு குறித்து ரஸல் கூறும்போது, “மேற்கு இந்தியத் தீவுகள் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தியது என் வாழ்க்கையில் பெருமைமிக்க சாதனைகளில் ஒன்றாகும். இதை நான் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

நான் சிறுவனாக இருந்தபோது, இந்த நிலைக்கு வருவேன் என எதிர்பார்க்கவில்லை. குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் சொந்த மண்ணில் விளையாட விரும்புகிறேன்” என்றார்.

2 மாதங்களுக்கு முன்பு மேற்கு இந்தியத் தீவுகளின் பிரபல வீரர் நிகோலஸ் பூரன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து தற்போது ரஸல் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் போன்ற ரி20 லீக் தொடர்களில் ரஸல் தொடர்ந்து விளையாடுவார் என்று தெரியவந்துள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக வரும் 20ஆம் திகதி முதல் சர்வதேச ரி20 தொடரில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி விளையாடவுள்ளது. இந்தத் தொடரின் முதல் 2 போட்டிகளில் மட்டுமே ஆந்த்ரே ரஸல் விளையாடுவார்.

ரஸல் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக மேற்கு இந்தியத் தீவுகள் அணியில் மத்யூ போர்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

புகையிரத திணைக்கள வேலைநிறுத்தம் வாபஸ்

நேற்று நள்ளிரவில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்த லோகோமோட்டிவ் இயக்க பொறியாளர்கள் சங்கத்தால் திட்டமிடப்பட்ட...

‘இதற்கு சட்டத்தில் இடமில்லை’: இரண்டு பொலிசாரையும் பிணையில் விடுவித்த நீதிமன்றம்!

பொலிஸ் திணைக்களத்தின் நற்பெயரைப் பாதுகாப்பதற்கும், ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு முன்மாதிரியாக இருப்பதற்கும்,...

பாடசாலை வகுப்பறை கட்டடங்களில் அவசர கால வெளியேற்ற பாதை இன்மைக்கு  எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

அனர்த்தங்களின் போது மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு அவசர கால வெளியேற்றம் இன்றி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்