திருமணமான 4-வது நாளில் இளம்பெண் தற்கொலை: ஒரு பவுன் நகைக்காக கொடுமைப்படுத்திய கணவர், மாமியார் கைது

Date:

திரு​வள்​ளூர் மாவட்​டம் பொன்​னேரி அருகே உள்ள முஸ்​லீம் நகரை சேர்ந்த கஜேந்​திரன் – சவுந்​தரி தம்​ப​தி​யின் மூத்த மகள் லோகேஸ்​வரி (24). பி.ஏ (பொருளா​தா​ரம்) முடித்த இவருக்​கும், பொன்​னேரி வட்​டத்​துக்கு உட்​பட்ட காட்​டாவூர் கிராமத்​தைச் சேர்ந்த தனி​யார் நிறுவன ஊழிய​ரான பன்​னீர் (37) என்​பவருக்​கும் சமீபத்​தில் திரு​மணம் நிச்​ச​யிக்​கப்​பட்டு கடந்த 27-ம் தேதி காட்​டாவூர் கிராமத்​தில் அமைந்​துள்ள அம்​மன் கோயி​லில் திரு​மணம் நடை​பெற்​றது.

திரு​மணத்​துக்கு முன்​ன​தாக லோகேஸ்​வரி குடும்​பத்​தினரிடம், பன்​னீர் குடும்​பத்​தினர், 10 பவுன் வரதட்​சணை கேட்​டுள்​ளனர். அப்​போது, லோகேஸ்​வரி குடும்​பத்​தினர் 5 பவுன் தரு​வ​தாக உறு​தி​யளித்​துள்​ளனர். தொடர்ந்​து, திரு​மணத்​தின்​போது, லோகேஸ்​வரி குடும்​பத்​தினர் 4 பவுன் நகை வரதட்​சணை​யாக​வும், சீர் வரிசை பொருட்​கள், மோட்​டார் சைக்​கிள் ஆகிய​வற்றை சீதன​மாக​வும் கொடுத்ததாக கூறப்​படு​கிறது.

இந்​நிலை​யில், லோகேஸ்​வரியை அவரது கணவர் குடும்​பத்​தினர், வரதட்​சணை​யில் பாக்​கி​யுள்ள ஒரு பவுன் நகையை பெற்​றோரிடம் வாங்கி வரு​மாறு கொடுமைப்​படுத்​தி​ய​தாக கூறப்​படு​கிறது. இச்​சூழலில், மறு​வீட்​டுக்​காக நேற்று முன் தினம் பெற்​றோர் வீட்​டுக்கு வந்​திருந்த லோகேஸ்​வரி, கழிப்​பறை​யில் தூக்​கிட்டு தற்​கொலை செய்து கொண்​டார்.

இதுகுறித்​து, தகவலறிந்த பொன்​னேரி போலீ​ஸார், லோகேஸ்​வரி​யின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்​காக பொன்​னேரி அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். தொடர்ந்​து, லோகேஸ்​வரி​யின் பெற்​றோர், ஒரு பவுன் நகைக்​காக கணவர் குடும்​பத்​தினர் கொடுமைப்​படுத்​தி​ய​தால் லோகேஸ்​வரி தற்​கொலை நடந்​துள்​ள​தாக பொன்​னேரி காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​துள்​ளனர்.

லோகேஸ்​வரி​யின் கணவர் பன்​னீர், அவரது குடும்​பத்​தினரிடம் விசாரணை நடத்திய போலீ​ஸார் பன்னீர், மாமியார் பூங்கோதையை நேற்று கைது செய்தனர். தலைமறைவான லோகேஸ்வரியின் மாமனார் ஏழுமலை, நாத்தனார் நதியா ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

“அம்மன் கனவில் வந்து சொன்னதால்…” – கோயிலில் மடிப்பிச்சை ஏந்தியது குறித்து நளினி விளக்கம்!

அம்மன் தன் கனவில் வந்து சொன்னதால் மடிப்பிச்சை ஏந்தியதாக நடிகை நளினி...

80 வயது மூதாட்டியின் மரண தண்டனையை இரத்து செய்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்

ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்தால் 80 வயது மூதாட்டி ஒருவருக்கு விதிக்கப்பட்ட மரண...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு கட்டுநாயக்கா விமான நிலையத்திலேயே சாரதி அனுமதிப்பத்திரம்

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்