20 வயது காதலியுடன் விடுதியில் சீருடையில் இருந்த 40 வயது பொலிஸ்காரர்; சுற்றிவளைத்த குடும்பத்தினர்!

Date:

நீதிமன்றத்தில் வழக்கொன்றில் சாட்சியமளிப்பதற்காக சென்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையான பொலிஸ் சார்ஜெண்ட் ஒருவர், 20 வயது கள்ளக்காதலியுடன் விடுதி அறையில் உல்லாசமாக இருந்த போது, யுவதியின் குடும்பத்தினரால் பிடிக்கப்பட்டார்.

பொலிஸ் உத்தியோகத்தர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், கம்பளை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகரால் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

கம்பளை தலைமையக காவல்துறையில் பணிபுரிந்த 40 வயதான பொலிஸ் சார்ஜெண்டே சிக்கியுள்ளார். அவரும் கள்ளக்காதலியும் நாவலப்பிட்டி விடுதியில் தங்கயிருந்துள்ளனர்.

இடைநீக்கம் செய்யப்பட்ட சார்ஜென்ட் ஒரு காலத்தில் கம்பளை போக்குவரத்துப் பிரிவில் பணியாற்றி தற்போது காவல்துறை அவசர அழைப்புப் பிரிவில் பணியாற்றி வருகிறார்.

அவர் ஒரு காலத்தில் நாவலப்பிட்டி காவல்துறையில் பணியாற்றினார். அப்போது நாவலப்பிட்டி, பவுவாகமவைச் சேர்ந்த இந்த இருபது வயது இளம் பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததற்காக கம்பளை காவல்துறைக்கு மாற்றப்பட்டார்.

நாவலப்பிட்டி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கில் சாட்சியமளிக்க சென்ற பொலிஸ் சார்ஜெண்ட், போலீஸ் சீருடையில் நாவலப்பிட்டியில் உள்ள மீபிடிய பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் அறைக்கு கள்ளக்காதலியை அழைத்துச் சென்றார். இது குறித்து அறிந்த யுவதியின் தாயும் சகோதரனும் ஹோட்டல் அறைக்கு விரைந்து சென்று தனது மகளைத் தேடினர். சார்ஜென்ட் தன்னைத் தாக்கி தனது மகளைக் கடத்திச் சென்றதாக தாயார் நாவலப்பிட்டி பொலிஸில் புகார் அளித்தார். பின்னர் அவர் நாவலப்பிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதற்கிடையில், சார்ஜென்ட் மற்றும் அந்தப் பெண் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று, பின்னர் சகோதரர் தங்களைத் தாக்கியதாகக் கூறி இருவரும் கம்பளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

திருமணமான இரண்டு பிள்ளைகளின் தந்தையான இந்த பொலிஸ் சார்ஜெண்ட், சீருடையில் இருந்தபோது திருமணத்திற்குப் புறம்பான உறவை வைத்திருந்ததாகவும், ஒரு விடுதியில் தங்கியிருந்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையின் பின்னர், பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

கம்பளை பிரிவுக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் எரிக் பெரேராவின் அறிவுறுத்தலின் பேரில் பொலிஸ் அத்தியட்சகர் கமல் அரியவன்ச நடத்திய விசாரணையின் பின்னர் அவர் இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டார்.

தாக்குதல் குற்றச்சாட்டுகள் குறித்து நாவலப்பிட்டி பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஈரான் போராட்டங்களில் 3,117 பேர் பலி

டிசம்பர் மாத இறுதியில் வெடித்த போராட்டங்களின் போது 3,117 பேர் கொல்லப்பட்டதாகவு...

விஜய்யிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை – குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்ப்பா?

டெல்​லி​ சிபிஐ தலைமை அலு​வல​கத்​தில் நேற்று ஆஜரான தவெக தலை​வர் விஜய்​யிடம்...

கற்பை நிரூபிக்க சீதை போல் மனைவியை தீக்குளிக்க வைத்த கணவன்!

குற்றமற்றவள் என நிரூபித்து காட்டு என மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்