பாலத்திலிருந்து விழுந்த யுவதியை காப்பாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர்

Date:

கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுகஸ்தோட்டை பாலத்தில் இருந்து மகாவலி ஆற்றில் தவறி விழுந்த இளம் பெண்ணை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காப்பாற்றியுள்ளார்.

போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளால் அந்த இளம் பெண்ணை மீட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று (10) மதியம் சம்பவ இடத்திற்கு அருகில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு, கட்டுகஸ்தோட்டை பாலத்திலிருந்து மகாவலி ஆற்றில் ஒரு இளம் பெண் விழுந்து நீரில் மூழ்கியதாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

அதன்படி, சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸ் உத்தியோகத்தர், இளம் பெண்ணைக் காப்பாற்ற பாலத்திலிருந்து மகாவலி ஆற்றில் குதித்தார்.

இந்த சம்பவத்தில் உயிர் பிழைத்த இளம் பெண் கட்டுகஸ்தொடை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவர் என்றும், தற்போது கட்டுகஸ்தொட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

“அம்மன் கனவில் வந்து சொன்னதால்…” – கோயிலில் மடிப்பிச்சை ஏந்தியது குறித்து நளினி விளக்கம்!

அம்மன் தன் கனவில் வந்து சொன்னதால் மடிப்பிச்சை ஏந்தியதாக நடிகை நளினி...

80 வயது மூதாட்டியின் மரண தண்டனையை இரத்து செய்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்

ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்தால் 80 வயது மூதாட்டி ஒருவருக்கு விதிக்கப்பட்ட மரண...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு கட்டுநாயக்கா விமான நிலையத்திலேயே சாரதி அனுமதிப்பத்திரம்

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்